ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மதுக்கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பழங்குளம் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு கவரங்குளத்தை சேர்ந்த முத்துமாரி என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி வழக்கம் போல வியாபாரத்தைமுடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது கடையின் பூட்டு உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று […]
