12 – ஆம் வகுப்பு மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் தமிழ்வேந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் தமிழ்வேந்தன் கடந்த 8 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வள்ளி வடுதாவடி பகுதியில் வசிக்கும் தனது அக்கா லட்சுமி வீட்டிற்கு இரண்டு மகள்களுடன் வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். […]
