சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையிலுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேசியக் கொடி ஏற்றினார். இதையடுத்து அவர் சாரண, சாரணியர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம். நிலவுக்குச் சென்றவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியைத் […]
