பெயர் தெரியாத காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவனை சிகிச்சைக்காக ஏற்றிச்சென்ற 108 ஆம்புலன்ஸ், பழுதின் காரணமாக பாதி வழியில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன், காய்ச்சலால் அகஸ்தீஸ்வரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவருக்குப் பெயர் தெரியாத காய்ச்சல் தீவிரமாக இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம், புதன்கிழமை மதியம் சுமார் 2.30 மணியளவில் […]
