அரசு ஆவணங்களில் எப்படியாவது தவறு வந்து விடுகின்றது. தனிப்பட்ட தகவல்களில் அடிப்படை தவறுகள் ஏற்படுகின்றது. சிறு பிழை ஏற்படுவது சகஜம். ஆனால் சில சமயங்களில் உயிருள்ள ஒருவர் இறந்துவிட்டதை போல பெரும் தவறுகள் ஏற்பட்டால் என்ன செய்வது, அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது . ஹரியானா மாநிலம் ரோத்தக்கிலில் இதேபோன்ற சம்பவம் நேற்று நடந்துள்ளது. அரசுப் பதிவேடுகளில் இறந்ததாகப் பட்டியலிடப்பட்ட 102 வயது முதியவர், தான் உயிருடன் இருப்பதாக அறிவிக்கச் செய்த காரியத்திற்காக தலைப்புச் செய்தியாகியுள்ளார். […]
