தமிழகத்தில் சமீப நாட்களாகவே கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3073 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 596 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 295, செங்கல்பட்டில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே முக கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகள் பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் […]
