காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரக்கூடிய பாரத் ஜோடோ யாத்திரை நேற்று (டிச.16) ராஜஸ்தானிலுள்ள தௌசாவில் 100வது நாளை நெருங்கியுள்ளது. முன்னதாக ராகுல்காந்தி சென்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன் பாதயாத்திரையை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவரான கே.சி.வேணு கோபால் கூறியிருப்பதாவது “மக்களின் பிரச்சனைகளை இந்த பாதயாத்திரை முன்னிலைப்படுத்தியது பெரிய சாதனை ஆகும். மேலும் இந்த பயணம் 100வது நாளை நெருங்கியுள்ளது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. […]
