முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் நீதிமன்றத்தில் குற்ற ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் […]
