கொரோனா பரவலின் காரணமாக பத்து நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடையை பிலிப்பைன்ஸ் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பொதுமுடக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்தி வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. இதனையடுத்து உலகம் முழுவதும் அதிக அளவில் கொரோனா தொற்று பரவியிருந்த நிலையில் இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. […]
