ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து பணத்தையும் நகையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் செங்குந்தபுரம் கிராமத்தில் கொளஞ்சியப்பன்-ஹேமலதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சபரீஸ்வரன் என்ற ஒரு மகன் உள்ளான். ஹேமலதா அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமலதா கொளஞ்சியப்பன் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். சபரீஸ்வரன் தனது சித்தப்பா வீட்டிற்கு […]
