மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள தசாளா என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணா ராவூத் (32) என்பவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் சோயா பீன்ஸ், துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்ற 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டுள்ளார். அதேசமயம் இன்சூரன்ஸ் ப்ரீமியமாக 45 ரூபாய் மற்றும் பயிர் காப்பீட்டாக 200 ரூபாய் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு முன்பே பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. […]
