இறைச்சிக்கடைக்காரர் ஒருவர் இளம்பெண்ணையும் அவரது குழந்தையையும் கொன்று துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி குளத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் கல்லூரியில் படிக்கும்போது சிலம்பரசன் என்ற இறைச்சிக்கடைக்காரரை காதலித்துள்ளார். ஆனால் சிலம்பரசனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இதற்கிடையே 2018 ஆம் ஆண்டு கலைச்செல்வியின் பெற்றோர் காசிராஜன் என்பவருக்கு தங்களது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இத்தம்பதியருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. திருமணத்திற்கு பிறகும் சிலம்பரசனுடன் […]
