மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை போல ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி இந்திராகாந்தி நகர்புற வேலை உறுதி திட்டத்தை மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார். அதன்படி நகர்புறங்களில் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு திட்டங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், பூங்கா பராமரிப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் பேனர்கள் அகற்றுதல் போன்ற பணிகள் வழங்கப்படுகின்றது. 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதி […]
