1-11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு இணைய வழி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி […]
