தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தொடர்ந்து திமுக உட்பட கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் காலதாமதம் செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு தமிழக சட்டசபையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது வரை ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உட்பட கூட்டணி கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் […]
