கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவது குறித்து விவாதிக்க மதகுருமார்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ஐகோர்டில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற உள்ள திருவிழாக்களை நடத்துவது தொடர்பாக மதகுருமார்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்க வேண்டுமென திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற உள்ள திருவிழாக்கள் நடத்துவது குறித்து […]
