நிவர் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மக்களை சந்தித்து பேசியதன் மூலம் அதிமுக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை தவிக்கவிட்டதை காண முடிந்ததாகக் கூறியுள்ளார். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற இடங்களில் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் சாடியுள்ளார். […]
