தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு வீதங்களும் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் நோய்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மே 10 முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதையடுத்து மே-24 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது பேசிய […]
