ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரணாப் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி பிரணாப் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.90 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார். அந்த பணத்தில் ரூ.70 ஆயிரத்தை ஒரு பகுதியிலும், மீதி பணமான ரூ.20 ஆயிரத்தை மற்றொரு பகுதியிலும் தனது ஸ்கூட்டியின் சீட்டுக்கு அடியில் பிரணாப் […]
