சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் பிரபல வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இயந்திரம் பழுதானதால் அதை வங்கி ஊழியர்கள் சரிபார்க்க சென்றனர். இந்நிலையில் அங்கிருந்த இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் ஏடிஎம். கார்டுகளிலுள்ள தகவல்களை திருடுவதற்காக பயன்படுத்தும் “ஸ்கிம்மர்” கருவி பொருத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் சென்னை பழையவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மனோகர் மற்றும் அவரது மகன் ஆனந்த் ஆகிய […]
