ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கண்ணவரம் அருகே கெல்லனப்பள்ளி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் நான் இன்னும் 10 நாட்களில் இறந்து விடுவேன் என்று கூறி வருகிறார். அதோடு இறந்த பிறகு அடுத்த 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவேன் என்றும் கூறுகிறார். இந்த பாதிரியாரின் பேச்சால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்நிலையில் நான் இன்னும் 10 நாளில் இறந்து விடுவேன் என்று கூறும் பாதிரியார் தனக்கு சொந்தமான இடத்தில் […]
