இந்திய சீக்கியர்கள் சுமார் 800க்கும் அதிகமானோர் பாகிஸ்தானிற்கு வைசாகி பண்டிகையை கொண்டாட சென்றுள்ளார்கள். இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் சுமார் 815 பேர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த குருத்வாராவில் வைசாகி தினத்தை கொண்டாட பாகிஸ்தானிற்கு படையெடுத்துள்ளனர். அதாவது பல வரலாற்று சிறப்பு வாய்ந்த முக்கிய வழிபாட்டு தலங்கள் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. வைசாகி தினம் என்பது சீக்கிய புத்தாண்டின் துவக்க தினமாகும். இது இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் அறுவடைக்கால பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. […]
