கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து வரும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வைத்திருக்கும் மாடுகளுக்கு 10 டன் வைக்கோலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் இருந்து பல்வேறு வகையான பொருட்களை ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வளர்த்து வரும் மாடுகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்து அவர் மிருகவதை தடுப்பு சங்க துணைத்தலைவர் அனுஷா […]
