வெளியூரிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்… விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகாமையில் இருக்கும் புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மதிராணி என்பவர் ரெட்டியபட்டி வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அருண் குமார் என்பவர் ஆந்திர மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். எனவே மதிராணி புளியம்பட்டியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஆந்திராவிலிருந்து அருண்குமார் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். […]
