செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சட்டமன்றத்தில் நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். சட்டமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி பேசி இருக்கிறேன். அதுபோன்று வன்னியர்களுக்கு இயற்றப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதி வழங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று சொன்னால், உடனடியாக 10.5 சதவீதத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல், […]
