தமிழக அரசு வேலைக்காக முயற்சி செய்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப் போடுகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், தமிழக அரசு பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அரசு வேலைக்காக முயற்சித்த இளைஞர்களின் கனவில் மண்ண அள்ளி போடும் விதமாக திமுக அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. […]
