கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்பாளையம் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் பூஜை முடிந்து நிர்வாகிகள் வழக்கம்போல பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கோவில் கருவறை பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உள்ளே […]
