வேன் எதிர்பாராதவிதமாக கோவிலில் மோதியதில் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வலையபாளையம் பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான சுயம்பு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிந்தாமணிப்பாளையம், போலநாயக்கன்பாளையம், நட்டுக்கொட்டையான்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பங்குனி மாதங்களில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டி திருவிழா நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கோபி பிரதான சாலையில் கோவில் அமைந்துள்ளதால் அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அம்மனை காவல் […]
