16 கோடி செலவு செய்து ஊசி போடப்பட்ட புனேவை சேர்ந்த ஒரு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு வயது சிறுமி வேதிகா ஷிண்டே. இந்த சிறுமி தசைநார் சிதைவு என்ற அரியவகை நோயின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நோயிலிருந்து மீண்டு வருவதற்கு 16 கோடி மதிப்பிலான ஒரு மருந்து செலுத்தப் பட வேண்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பொதுமக்களிடம் உதவி கேட்டனர். பொது மக்களும் ஏராளமானோர் […]
