வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்க அறிவுறுத்தி, வழக்கை ஜூலை 2ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வழக்கு விவரம்: செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயமாக கருதப்படுகிறது. இந்த சரணாலயத்திற்கு 27 வகையான பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து வருவது வழக்கம். இந்த நிலையில் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு […]
