இருசக்கர வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவிகளை பொறுத்த உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும் படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கடந்த 2013ஆம் ஆண்டு பெண் பல் மருத்துவர் ஒருவர், விபத்துக்குள்ளான வழக்கில் 18லட்சத்து 43ஆயிரம் ரூபாயை இழப்பீடாக மோட்டர் வாகன தீர்ப்பாயம் நிர்ணயம் செய்திருந்தது. இதனை அடுத்து குறைவான தொகைய நிர்ணயிக்கப்பட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்- அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, […]
