தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக சார்பாக வெள்ள நிவாரண பணிகளுக்கு மாநில செயலாளர் திரு.டால்பின் ஸ்ரீதர் அவர்கள் மற்றும் திரு.ரமேஷ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நிவாரண உதவி எண்கள் (Helpline number) […]
