பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 275 ஜோடி வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவைகள் வழங்கப்படுவதை தவிர்ப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வெள்ளிக் கொலுசுகள் வழங்கப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. […]
