நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியது, “இந்தியாவில் 50 ஆண்டு காலமாக நிலவி வந்த குடும்ப அரசியலை ஒழித்துக் கட்டியவர் பிரதமர் மோடி. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கோவைக்கு அளித்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் கோவை இன்னும் முன்னேறவில்லை. மாறாக பின்னால் சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதிகள் அனைத்தையும் காண்ட்ராக்டர்கள் விழுங்கிவிட்டனர். திமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்கிய ஹாட் […]
