வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் பகுதியில் சிறுவன் பிணம் ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பென்னலூர் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த சிறுவன் […]
