கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் உள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. வடிவேலுக்கு முதல் நிலை அறிகுறி, எஸ். ட்ராப் அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மரபணுமாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.
