பணம் தர மறுத்ததால் பெற்ற தாய் என்றும் பாராமல் சாலையில் வைத்து தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பொன்னேரிபட்டியில் நல்லம்மாள் என்ற மூதாட்டி கூலித்தொழில் செய்து தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நல்லம்மாள் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது நல்லமாளை அவரது மகன் சண்முகம், மருமகள் ஜானகி மற்றும் உறவினர் பாலசுப்பிரமணி […]
