பாகிஸ்தானில் எனது அரசுக்கு எதிராக வெளிநாட்டு சதி நடப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான விவாதம் நாளை நடைபெற உள்ளது. மேலும் தீர்மானத்தின் விவாதத்தை தொடர்ந்து வரும் 3ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இம்ரான் கான் தனது அரசாங்கத்தை கவிழ்க்க வெளிநாட்டு சதி செய்வதை நிரூபிக்கும் ‘அச்சுறுத்தல் கடிதம்’ தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். […]
