இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு படகில் சட்டவிரோத வகையில் புலம்பெயர முயன்ற 85 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையை சேர்ந்த ரணவிக்ரமா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்நிலையில், மீன்பிடி படகு ஒன்று சட்டவிரோத வகையில் சிலரை ஏற்றி கொண்டு பட்டிகலோவா பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த கடற்படை அதிகாரிகள் படகை தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த படகில் 85 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 60 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள் […]
