தமிழகத்திலேயே முதல் கட்டமாக திண்டுக்கல்லில் ரூபாய் 20 கோடி செலவில் இலங்கைவாழ் தமிழர்களுக்கு ஆயிரம் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, அடியனூத்து, தோட்டனூத்து, கூவனூத்து ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருக்கும் பகுதிகளை ஆய்வு செய்து, அவர்களிடம் குறைகளை முதலில் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஸ்தான் முகாம்களில் இலங்கைவாழ் தமிழர்கள் விடுத்த […]
