கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை பெற்றுக் கொண்டவர்களாக இருப்பினும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று கனடா சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை பெற்றிருந்தால் அவர்கள் வெளிநாடு சென்று திரும்பும் பொழுது தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கடந்த ஜூலை மாதத்தில் அந்நாட்டு பெடரல் அரசு அறிவித்தது. இதனால் கனடா மக்கள் அவசர அவசரமாக விடுமுறை பயணத்திற்காக திட்டங்களைத் தீட்டத் தொடங்கினர். ஆனால் கனடாவில் இன்னும் வெளிநாடு செல்வது […]
