லாரியின் டேங்க் வெடித்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் முதலைபட்டிபுதூர் பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பானுபிரியா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி அப்பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று டீசல் ஏற்றி சொல்லும் டேங்கர் லாரி ஒன்று வெல்டிங் வேலைக்காக பெரியசாமியின் பட்டறைக்கு வந்துள்ளது. இதனையடுத்து லாரியின் வால்வை பொருத்துவதற்காக பெரியசாமி […]
