ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் சாலையில் வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தது, திடீரென அந்த நாய் பொதுமக்களை வெறித்தனமாக கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் அந்த நாயை விரட்டி அடித்தனர். அப்போது பாட்டி குளம்,போர்டின் பேட்டை, ஈஸ்வரன் கோவில் தெரு மற்றும் பஜார் வீதி ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற பொதுமக்களை கடித்தது. இதனால் மொத்தம் 47 நபர்களை அந்த நாய் கடித்து உள்ளது. அதில் படுகாயம் அடைந்த சேகர், முருகேசன், அண்ணாமலை, பாரதி, கணேசன், கணபதி, கண்ணன், […]
