ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டமின்றி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இது குறித்து சென்னையில் நடைபெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு மேல் பிரதான சாலைகளான காமராஜர் சாலை, காந்திரோடு, பேருந்து நிலைய பகுதிகள், மூங்கில் மண்டபம் என நகரின் முக்கியமான பகுதிகளுக்கு யாரும் செல்ல இயலாதவாறு காவல்துறையினர் […]
