தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால், அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி அருவி, கொடைக்கானல் அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, […]
