வெடிமருந்து வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தர்மபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரப்பட்டரை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மாமியார் ராமலட்சுமி பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட பட்டாசு விபத்தில் மாணவி பலியானார். இதுதொடர்பாக ராமலட்சுமி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ராஜேந்திரன் பட்டாசுகளை தன்னுடைய வீட்டின் […]
