வெடி பொருட்கள் கொண்டு சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் அண்ணா நுழைவு வாயில் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெள்ளை பவுடர் 25 கிலோ, கேமிக்கல் சால்ட் 25 கிலோ, அலுமினியம் பவுடர் 10 கிலோ ஆகியவற்றை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை […]
