கடனை திருப்பி செலுத்த முடியாததால் வெங்காய வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(55). இவர் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். கிருஷ்ணமூர்த்தி தனது தொழில் தேவைக்காக பல தனி நபர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இதுவரை அவர் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய பணத்தை அவரால் திருப்பி கொடுக்க இயலவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்கவே கிருஷ்ணமூர்த்தி […]
