நபர் ஒருவர் தனக்கு வெங்காயம் தர மறுத்த உணவு பரிமாறியவரை குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் ரியாசத் அலி(59). கூலித் தொழிலாளியான இவர் 30 வருடங்களாக டெல்லியிலேயே தங்கி தினமும் கிடைக்கும் வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திஷ்பூர் பெரி என்ற பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு கூலித் தொழிலுக்காக இவர் சென்றுள்ளார். அங்கு அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சாப்பிட கேண்டீன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. […]
