வீட்டில் 15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 வடமாநில வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ.வு.சி. நகரில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். இந்நிலையில் வீட்டில் 80 மூட்டைகளில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் […]
